10/01/2025
மவுலான ஜலாதீன் ரூமி அவரது ஞான ஆசிரியர் சாம்சுதீன் அவர்களை தன் இல்லத்திற்கு விருந்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
அவரும் மவுலானாவின் அழைப்பை
ஏற்று அவரது வீட்டிற்கு வந்து இருந்தார்.
மவுலானாவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
விருந்து ஆரம்பிப்பதற்கு முன், எனக்கு
Wine ( மது) தர முடியுமா ? என்று ஆசிரியர் கேட்டார்.
மவுலானாவுக்கு ஒரே அதிர்ச்சி.
நீங்கள் மது அருந்துவீர்களா?
என்று கேட்டார்.
ஆம் என்றார்.
எனக்கு தெரியாது.
இப்போது தெரிந்துவிட்டது அல்லவா? ஏற்பாடு செய் என்றார் ஞானகுரு.
இந்த இரவு நேரத்தில் மதுவிற்கு எங்கே போவேன்? என்றார் மவுலானா.
வேலைக்காரர்களிடம் சொல்லி வாங்கி வரச்சொல் என்றார்.
வேலைக்கார முன்னால் நான் கட்டி காத்த சுயகெளரவம் போய் விடுமே? என்றார் மவுலானா.
அப்போது நீயே சென்று வாங்கி வா? என்றார்.
இந்த ஊர் முழுக்க தெரிந்துவிடுமே? எப்படி சென்று வாங்குவேன்? என்று கேட்டார்.
மது இல்லாவிட்டால் நான் சாப்பிட மாட்டேன் என்றார்.
வேறு வழி இல்லாமல் மவுலானா
ஒரு பாட்டிலை எடுத்து தன் ஆடைக்குள் மறைத்து கொண்டு மதுகடைக்கு
சென்றார்.
அவர் மதுக்கடைக்குள் நுழையும் போது ஊர் மக்கள் அவரை பார்த்து விட்டனர்.
அவர் மதுவை வாங்கி கொண்டு திரும்பும்போது, மசூதி அருகே
அவரை வழிமறித்தார்கள்.
மதகுருவாக மசூதியில் இருக்கும் இவர், மது வாங்கி கொண்டு செல்கிறார் என்று கூச்சலிட்டு, அவர் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்தார்கள்.
மதகுருவாக இருந்து நமக்கு நல்வழி காட்ட வேண்டியவர், மது வாங்கி கொண்டு வீட்டிற்கு போகிறாரே என்ற கோபத்தில், அவரை பலமாக அடிக்க ஆரம்பித்தார்கள்.
மவுலானாவால் ஒன்றும் பேச முடியவில்லை.
அவர் மீது எந்த கருணையும் இல்லாமல், அவர் ஊருக்கு செய்த நற்காரியங்களை மறந்து, அவரை கொல்லவே முயன்றனர்.
அப்போது ஞானகுருவின் பலத்த குரல் கேட்டது.
முட்டாள்களே அது மது அல்ல. Vinegar.சமைக்க எடுத்து கொண்டு செல்கிறார்.
கூட்டம் நம்ப மறுத்தது.
ஞானகுரு பாட்டிலை வாங்கி மூடியை கழற்றி அங்கிருந்தவர்கள் கையில் ஊற்றினார்.
அது Vinegarதான். கூட்டம் அதிர்ச்சி அடைந்தது.
இதுவரை உங்களுக்கு நன்மை செய்த இமாம் மதகுருவை இப்படி செய்து விட்டீர்களே? அவர் செய்த நற்செயல்களை ஒரு நிமிடத்தில் மறந்து விட்டீர்களே? என்று கடிந்து கொண்டார்.
மக்கள் தலை குனிந்து நின்றார்கள்.
மவுலானாவின் வீட்டிற்கு வருவதற்கு முன்பே, மது கடைக்காரரிடம், மவுலானா வந்து மது கேட்டால், Vinegarகொடு என்று சொல்லி இருந்தார்.
மவுலானாவை அழைத்து கொண்டு
அவரது வீட்டிற்கு வந்தார் ஆசிரியர்.
எதற்கு இந்த நாடகம்? என்று கேட்டார் மவுலானா.
நீ சுயகெளரவம் என்று அடிக்கடி சொல்வாயே, அந்த சுயகெளரவம் வெறும் மாயை என்று புரிய வைக்கத்தான் என்றார்.
நீயே பார்த்தாய் அல்லவா?
ஒரு பாட்டில் மதுவின் முன்னால் நீ கர்வப்படுவாயே அந்த சுயகெளரவம் சுக்குநூறாகிவிட்டது.
இனிமேலாவது சாதாரண மக்களிடம் நீ சுயகௌரவத்தை, மரியாதையை எதிர்பார்த்து ஏங்காதே. யாரிடமும் எதிர்பார்க்காதே. மனதை சமநிலையில் வைத்து உன் கடமைகளை செய். இன்னும்
சிறப்பாக உன் வாழ்வு இருக்கும்.
யாருக்கு உண்மையான ஆத்மார்த்த கெளரவத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றால் அது இறைவன் ஒருவனுக்கே.
எல்லா புகழும் இறைவனுக்கே.
மற்றவை எல்லாம் வெறும் வரட்டு கெளரவம், மாயைகள் என்று கூறி முடித்தார் ஞான ஆசிரியர் சமாசுதீன்.
Thanks - manoharan