அர்த்தமுள்ள இந்து மதம் - Meaningful Hinduism

  • Home
  • India
  • Chennai
  • அர்த்தமுள்ள இந்து மதம் - Meaningful Hinduism

அர்த்தமுள்ள இந்து மதம் - Meaningful Hinduism “ மேன்மைகொள் சைவமும் தமிழும் விளங்க?
(390)

மவுலான ஜலாதீன் ரூமி அவரது ஞான ஆசிரியர் சாம்சுதீன் அவர்களை தன் இல்லத்திற்கு விருந்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அவரு...
10/01/2025

மவுலான ஜலாதீன் ரூமி அவரது ஞான ஆசிரியர் சாம்சுதீன் அவர்களை தன் இல்லத்திற்கு விருந்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

அவரும் மவுலானாவின் அழைப்பை
ஏற்று அவரது வீட்டிற்கு வந்து இருந்தார்.

மவுலானாவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

விருந்து ஆரம்பிப்பதற்கு முன், எனக்கு
Wine ( மது) தர முடியுமா ? என்று ஆசிரியர் கேட்டார்.

மவுலானாவுக்கு ஒரே அதிர்ச்சி.

நீங்கள் மது அருந்துவீர்களா?
என்று கேட்டார்.

ஆம் என்றார்.

எனக்கு தெரியாது.

இப்போது தெரிந்துவிட்டது அல்லவா? ஏற்பாடு செய் என்றார் ஞானகுரு.

இந்த இரவு நேரத்தில் மதுவிற்கு எங்கே போவேன்? என்றார் மவுலானா.

வேலைக்காரர்களிடம் சொல்லி வாங்கி வரச்சொல் என்றார்.

வேலைக்கார முன்னால் நான் கட்டி காத்த சுயகெளரவம் போய் விடுமே? என்றார் மவுலானா.

அப்போது நீயே சென்று வாங்கி வா? என்றார்.

இந்த ஊர் முழுக்க தெரிந்துவிடுமே? எப்படி சென்று வாங்குவேன்? என்று கேட்டார்.

மது இல்லாவிட்டால் நான் சாப்பிட மாட்டேன் என்றார்.

வேறு வழி இல்லாமல் மவுலானா
ஒரு பாட்டிலை எடுத்து தன் ஆடைக்குள் மறைத்து கொண்டு மதுகடைக்கு
சென்றார்.

அவர் மதுக்கடைக்குள் நுழையும் போது ஊர் மக்கள் அவரை பார்த்து விட்டனர்.

அவர் மதுவை வாங்கி கொண்டு திரும்பும்போது, மசூதி அருகே
அவரை வழிமறித்தார்கள்.

மதகுருவாக மசூதியில் இருக்கும் இவர், மது வாங்கி கொண்டு செல்கிறார் என்று கூச்சலிட்டு, அவர் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்தார்கள்.

மதகுருவாக இருந்து நமக்கு நல்வழி காட்ட வேண்டியவர், மது வாங்கி கொண்டு வீட்டிற்கு போகிறாரே என்ற கோபத்தில், அவரை பலமாக அடிக்க ஆரம்பித்தார்கள்.

மவுலானாவால் ஒன்றும் பேச முடியவில்லை.

அவர் மீது எந்த கருணையும் இல்லாமல், அவர் ஊருக்கு செய்த நற்காரியங்களை மறந்து, அவரை கொல்லவே முயன்றனர்.

அப்போது ஞானகுருவின் பலத்த குரல் கேட்டது.

முட்டாள்களே அது மது அல்ல. Vinegar.சமைக்க எடுத்து கொண்டு செல்கிறார்.

கூட்டம் நம்ப மறுத்தது.

ஞானகுரு பாட்டிலை வாங்கி மூடியை கழற்றி அங்கிருந்தவர்கள் கையில் ஊற்றினார்.

அது Vinegarதான். கூட்டம் அதிர்ச்சி அடைந்தது.

இதுவரை உங்களுக்கு நன்மை செய்த இமாம் மதகுருவை இப்படி செய்து விட்டீர்களே? அவர் செய்த நற்செயல்களை ஒரு நிமிடத்தில் மறந்து விட்டீர்களே? என்று கடிந்து கொண்டார்.

மக்கள் தலை குனிந்து நின்றார்கள்.

மவுலானாவின் வீட்டிற்கு வருவதற்கு முன்பே, மது கடைக்காரரிடம், மவுலானா வந்து மது கேட்டால், Vinegarகொடு என்று சொல்லி இருந்தார்.

மவுலானாவை அழைத்து கொண்டு
அவரது வீட்டிற்கு வந்தார் ஆசிரியர்.

எதற்கு இந்த நாடகம்? என்று கேட்டார் மவுலானா.

நீ சுயகெளரவம் என்று அடிக்கடி சொல்வாயே, அந்த சுயகெளரவம் வெறும் மாயை என்று புரிய வைக்கத்தான் என்றார்.

நீயே பார்த்தாய் அல்லவா?
ஒரு பாட்டில் மதுவின் முன்னால் நீ கர்வப்படுவாயே அந்த சுயகெளரவம் சுக்குநூறாகிவிட்டது.

இனிமேலாவது சாதாரண மக்களிடம் நீ சுயகௌரவத்தை, மரியாதையை எதிர்பார்த்து ஏங்காதே. யாரிடமும் எதிர்பார்க்காதே. மனதை சமநிலையில் வைத்து உன் கடமைகளை செய். இன்னும்
சிறப்பாக உன் வாழ்வு இருக்கும்.

யாருக்கு உண்மையான ஆத்மார்த்த கெளரவத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றால் அது இறைவன் ஒருவனுக்கே.
எல்லா புகழும் இறைவனுக்கே.

மற்றவை எல்லாம் வெறும் வரட்டு கெளரவம், மாயைகள் என்று கூறி முடித்தார் ஞான ஆசிரியர் சமாசுதீன்.

Thanks - manoharan

மந்திரங்களை  அதிகமாக  ஜெபம் பண்ண பண்ண நம் கூட இருப்பவர்கள்/நெருங்கியவர்கள் நமக்கு செய்த கொடுமைகள்/அநீதிகள்  மீண்டும் அதி...
10/07/2024

மந்திரங்களை அதிகமாக ஜெபம் பண்ண பண்ண நம் கூட இருப்பவர்கள்/நெருங்கியவர்கள் நமக்கு செய்த கொடுமைகள்/அநீதிகள் மீண்டும் அதிகமாக நினைவுக்கு வந்து மனதை ரணம் செய்கிறது..இது ஏன் நிகழ்கிறது? உலக பற்றில் இருந்து விடுவிப்பதட்காகவா இல்லை நம் ஜெபத்தில் தவறுகள் ஏதும் இருக்குமா? (மந்திர ஜெபத்தில் அனுபவமும் இது பற்றிய அறிவும் உள்ள யாராவது இருந்தால் தயவு செய்து விளக்குங்கள்..நன்றி )

30/11/2020
அன்பு குழந்தையே....மாற்றங்கள் ஏற்பட போகிறது அதற்கு உன்னை தயார் படுத்திக்கொள்எப்போது என் மீது முழுவதுமாக பாரங்களை சுமத்தி...
19/11/2020

அன்பு குழந்தையே....
மாற்றங்கள் ஏற்பட போகிறது அதற்கு உன்னை தயார் படுத்திக்கொள்
எப்போது என் மீது முழுவதுமாக பாரங்களை சுமத்தி உண்மையான பக்தியை செலுத்தி விட்டாயோ அப்போதே உன் மீது பக்தி செலுத்த ஆரப்பித்து விட்டேன்.
அந்த நாட்க்களை நினைத்து பார் மிக தீவிரமாக அன்புடன் என்னுள் ஐயக்கியமாகி இருக்கிறாய்.
இடையில் ஏற்பட்ட சில குழப்பங்களால் உனது எண்ணங்கள் எனது விருப்பத்திற்கு மாறாக மாறியது இதனால் கட்டுபாட்டை இழந்து ஓடிய வண்டியை போல நடந்து கொண்டாய்.
என்னுடைய பிடியில் இருந்து எவரும் விலக முடியாது, உன்னை பலமுறை விபத்துகளில் இருந்து சரியான நேரத்தில் அதிலிருந்து காத்திருக்கிறேன்.
உன்னை தேடி வந்து அமர்ந்து கொண்டு இருக்கிறேன். என்னை நிராகரித்து விடாதே.
நான்உன்னுடன் இருக்கிறேன். எப்போதும் உன்னை கைவிட நினைக்க மாட்டேன்.
மனதில் ஏற்பட்ட குழப்பம் சலனம் இதனால் பல முறை பாதை மாறி போக இருந்த உன்னை எனது பிடியில் வைத்து கொண்டு இருக்கிறேன்.
எத்தனை பிரச்சனைகள் எத்தனை சண்டைகள் எத்தனை துயரங்கள் கடினமாக அனுபவித்தாய்.
ஒரு முடிவு இல்லாமல் கடிவாளம் இல்லாமல் அத்தனையும் உன்னை தொடர்ந்து கொண்டே இருந்தது.
உன்னை வழிநடத்தி அழைத்து செல்வேன். அப்படியே உனது பிள்ளைகளை நான் வழி நடத்துவேன்.
எத்தனை ஜென்மங்கள் ஆனாலும் தொடர்ந்து வழி நடத்துவேன்.
இதுவரை நீ கடந்து வந்த பாதையை மறந்து விடு.
உனது எண்ணங்களை தலையெழுத்தை மாற்றியமைத்து பல வருடங்கள் ஆகிறது.
இதுவரை செய்த பாவங்களையும் மன்னித்து உனக்கு புது வழியை காட்ட போகிறேன். நோயற்ற வாழ்வு வழங்க போகிறேன்.
விரைவில் நல்ல செய்தி உனது செவிகளில் வந்து சேரும்.
முழு கவனத்தையும் என்மீது திருப்பு. இப்போது செய்யும் பணியில் இருந்து விடுபட நினைக்காதே.
உன்னை நீ நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உயர்த்த போகிறேன்.
நம்பிக்கையோடு காத்திரு. பொறுமையாக இரு. நான் இருக்கிறேன் என்றும் உன் நிழலாக உனக்காக.
-பரம்பொருள்

Address

17-A North Boag Road
Chennai
600018

Alerts

Be the first to know and let us send you an email when அர்த்தமுள்ள இந்து மதம் - Meaningful Hinduism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share